நூறாவது வயதில் காதலை வெளியிட்ட ஆஸ்திரேலிய பாட்டி


ஆஸ்திரேலியாவை சேர்ந்த நூறு வயது பெண் 40 ஆண்டுகளுக்கு முன் விடுக்கப் பட்ட காதல் விண் ணப்பத்தை ஏற்றுக் கொண் டுள்ளார்.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் மய்ரா ஹாரிஸ்.

கடந்த வாரம் இவர் நூறாவது பிறந்த நாளை கொண்டாடினார். தான் வேலை செய்த வின்சர் ஓட்டலிலேயே இந்த பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பேத்தி திருமணம் 90ம் ஆண்டு இதே ஓட்டலில் நடந்தது. கடந்த 60ம் ஆண்டுகளில் மய்ரா இந்த ஓட்டலில் உள்ள பாரில் பணி புரிந்த போது இவரை விட 30 வயது குறைந்த ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த நபர், இவரை காதலிப்பதாக கூறினார். ஆனால், அப்போது மய்ரா அந்த நபரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், அந்த நபர் திருமணம் செய்து கொள்ளாமலேயே காலத்தை கழித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மய்ரா திடீரென, அந்த நபரின் காதலை தற்போது ஏற்றுக்கொள்வதாக கூறி கண்ணீர் வடித்தார்.

இதுகுறித்து, மய்ராவின் மகள் குறிப்பிடுகையில்,

" இந்த தள்ளாத வயதில் காதலை பற்றி கூறி பெயரை கெடுத்து கொள்கிறார் என் தாய்' என்றார்.மய்ராவை காதலித்த நபர், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரியாவில் நோய்வாய்ப்பட்டுள்ள அவரது தாயை கவனித்து வருகிறார். இதனால், அவரால் காதலியின் நூறாவது பிறந்த நாளில் கலந்து கொள்ள முடியவில்லை.

0 Responses