பாடகர்களாகும் நடிகர், நடிகைகள்

தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகளை பின்னணி பாடகர்களாகும் மோகம் பரவுகிறது. ஏற்கனவே ரஜினி மன்னன் படத்தில் “அடிக்குது குளிரு” என்ற பாடலை பாடினார். அதுபோல் கமலும் நிறைய படங்களில் பாடி இருக்கிறார்.
விஜய் பத்ரி படத்தில் “என்னோட லைலா வர்றாளே ஸ்டைலா” பாட்டையும், விஷ்ணு படத்தில் “தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா” பாடலையும் பாடினார்.


சமீபத்தில் ரிலீசான கந்தசாமி படத்தில் விக்ரம் அனைத்து பாடல்களையும் சொந்த குரலில் பாடி பாடகராக அறிமுகமானார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் “உன்மேல ஆசைதான்” என்ற பாட்டை பாடி பாடகராக அடையாளம் காட்டினார். நடிகை மம்தா மோகன்தாஸ் வில்லு படத்தில் “டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல விளையாடி பார்ப்போம் தில்லானா” என்ற பாட்டை பாடினார். இப்பாடல் பட்டி தொட்டியொங்கும் ஒலித்து இளசுகளை ஆட்டம் போட வைத்தது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் “அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்” என்ற பாட்டை நடிகர் சித்தார்த் பாடினார்.
டி.ஜி. கஜேந்திரன் இயக்கத்தில் விரைவில் ரிலீசாக உள்ள “மகனே என் மருமகனே” படத்தில் குஷ்பு ஒரு பாடலை பாடியுள்ளார். “தம்பிக்கு இந்த ஊரு” படத்தில் “கூத்தா டூ மச்சி” என்ற பாடலை பரத் பாடிஉள்ளார். “குரு சிஷ்யன்” படத்தில் சத்யராஜ், சுந்தர் .சி இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளனர்.

நடிகர், நடிகைகள் பாடகர்களாவதால் பின்னணி பாடகர், பாடகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் வாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்று தவிக்கிறார்கள்.
0 Responses