சூப்பர் ஸ்டார் ரஜினி - இசைப்புயல் ரஹ்மான் சந்திப்பு



இசைப்புயலும், திரைப்புயலும் ஒரே இடத்தில் சந்தித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பு ரொம்ப ரொம்ப விசேஷமானது. ஏன்? நின்று போயிருந்த 'சுல்தான் தி வாரியர்' படத்தை மீண்டும் துவங்க திட்டமிருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை அனுப்பியிருக்கிறது


சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ. முதலில் இந்த அனிமேஷன் படத்தில் ஆக்ரோஷ ஹீரோவாக வளர்ந்து வந்தார் ரஜினி. இப்போது அதில் ஒரு முக்கியமான மாற்றம். முப்பது நிமிடங்கள் நிஜமான ரஜினியாகவே தோன்றப் போகிறாராம் சூப்பர் ஸ்டார்.

இவருக்கு ஒரு அறிமுக பாடல் இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க வந்திருக்கிறார். அசோக் நகரில் இருக்கும் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு தனது மகள் சவுந்தர்யாவுடன் வந்தவர், அரை மணி நேரத்திற்கு மேலாக அவருடன் பேசிக் கொண்டிருந்தாராம்.
இந்த பாடலை வழக்கம் போல வைரமுத்துவே எழுதப் போவதாகவும் தகவல். பொதுவாக ஒரு பாடலை உருவாக்கி தர நீண்ட காலம் எடுத்துக் கொள்வார் ரஹ்மான். இந்த படத்திற்கு கூட உடனே பாடல்களை தரவில்லை என்று முன்பு வருத்தத்தில் இருந்தார் ரஜினி. அதையெல்லாம் களைந்து உடனே பாடல் தர வேண்டும் என்பதற்காகதான் இந்த நேரடி சந்திப்பாம்.

சுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் உண்டு என ஏற்கெனவே கூறியுள்ளோம். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படத்தில் காட்சிகள் வைக்கப்படுகிறதாம். அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் வருகின்றன.
இந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம்பெறக்கூடும் என்கிறது ஆக்கர் யூனிட்.
அது என்ன வேடம்?
“அதான் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ்.. படம் வரட்டும் பாருங்க. முக்கியமான இன்னொரு விஷயம்… சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை. தீபாவளிக்குள் நிச்சயம் வரும்” என்கிறார் சௌந்தர்யா.
சௌந்தர்யாவின் திருமணத்துக்கு முன் படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடித்துவிட வேண்டும் என்பது அப்பாவின் அன்பான கட்டளையாம்!
0 Responses